அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
என்னுடைய பெயர் அன்சார் மொஹிதீன்.நான் ஸ்ரீ லங்காவில் உள்ள சம்மாந்துறையில் பிறந்து தற்போது சவுதி அரேபியாவில் வசித்து வருகின்றேன். எனக்கு இளம் வயதிலிருந்தே கவிதை, கட்டுரை எழுதுவது ரொம்ப பிடிக்கும். அதைவிட என்னைச் சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் சமூகப்பிரச்சினைகளிலும், சமுதாய சேவையிலும் மிகவும்அக்கறை காட்டுவேன். அதன் பிரதி விம்பமாகத்தான் "மக்கள் நண்பன்" என்ற அமைப்பின் மூலம் எனது இதயத்தை வருடும் சமூகப் பிரச்சனைகளை கவிதை வடிவமாகவும், வீடியோ உரையாடல் (Video Talk) வடிவமாகவும் கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகின்றேன். நான் இப்படி செய்து வருவதை எனது பல நண்பர்கள் மனம் திறந்து பாராட்டுகிறார்கள் அதே நேரம் சில நண்பர்கள் குறிப்பாக எனது சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தும் வருகின்றார்கள். நான் அவர்களைப் பற்றி சிறிதளவும் கவலைப் படவில்லை காரணம் நான் எதையுமே சொந்த நலன் கருதி செய்யவில்லை. சமுதாய நலன் கருதியே செய்கின்றேன்.
எனது ஊரை, சம்மாந்துறையை சிலர் தமது சொந்த இலாபங்களுக்காக சூரையாடப்பார்க்கின்றார்கள்.அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம். இதே சம்மாந்துறை மண்ணில் தான் எனது மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய மர்ஹூம் M.H.M.அஷ்ரப் அவர்கள் பிறந்தார்கள். அவரது வழியிலேயே எங்களது அமைப்பின் பயணம் இன்ஷா அல்லாஹ் தொடரும்.. எனக்கு என்னுடைய ஆக்கங்களைப் பார்த்து விட்டு மனமாறப் பாராட்டும் என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.
அத்தோடு எனது கவிதைகளைத் தொடர்ந்தும் ஒலி பரப்பி உலகமெல்லாம் எடுத்துச் செல்லும் பா முகம் டீ வீக்கும் எனது கவிதைகளுக்கு தனது வசீகரக் குரலால் உயிர் கொடுக்கும் சகோதரி சைபா மாலிக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.மேலும் என்னுடைய வீடியோ உரையாடல்கள், குறும் படங்கள் மற்றும் கவிதைகளை உலகுக்கு எடுத்து வந்து தங்கள் வாசகர்களை மகிழ்விக்கும் ஜப்னா முஸ்லிம் (Jaffnamuslim.com), சம்மாந்துறை சன் (Sammanthuraisun.com), சம்மாந்துறை வெப் (Sammanthuraiweb.blogspot.com),மடவெல நியூஸ் (Madewelanews.com) ஸ்ரீ லங்கா முஸ்லிம் நேசன், பா முகம் டி வீ ,காத்தான்குடி இன்போ (Kattankudi.info) இப்படி தொடர்ந்து கொண்டே போகலாம்.
இவை எனக்குத் தெரிந்த மீடியாக்கள். மேலும் எத்தனையோ மீடியாக்கள் இலை மறை காயாய் என்னுடைய ஆக்கங்களை எடுத்து வருகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவை எனக்குத் தெரிந்த மீடியாக்கள். மேலும் எத்தனையோ மீடியாக்கள் இலை மறை காயாய் என்னுடைய ஆக்கங்களை எடுத்து வருகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொடர்ந்தும் எனக்கு ஊக்கமளிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு நன்றி கூறி இங்கே விடைபெறுகின்றேன்.
என்றென்றும் உங்கள் அன்புடன்
"மக்கள் நண்பன்"
-சம்மாந்துறை அன்சார் மொஹிதீன்-
"Keep reading"
0 comments:
Post a Comment