Definition List

Home » » அவதானம் வேண்டும் - கவனம் வேண்டும்.

அவதானம் வேண்டும் - கவனம் வேண்டும்.

Written By Unknown on Sunday 16 June 2013 | 04:05

கிழக்கு மாகாண அம்பாரை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தை அண்மித்த இடத்தில் ஒரு பாலம் இருக்கிறது. இந்தப் பாலத்தை அதனை சுற்றியிருக்கின்ற ஊர்களில் இருப்பவர்கள் நன்கு அறிவர் அதாவது கல்முனை, மாளிகைக் காடு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளச் சேனை, நிந்தவூர், ஓலுவில், மாவடிப்பள்ளி, அக்கரைப் பற்று போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி நன்கு தெரியும்.


இந்தப் பாலம் ஒரு ஓடிங்கிய பாலம், இவ்விடத்தில் பல விபத்துக்கள் சம்பவித்து இருக்கின்றன, உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்தப் பாலம் தொடர்பாக என்னுடைய மக்கள் நண்பன் சார்பாக ஒரு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காக அங்கு சென்று அதைப் படம் பிடித்து இருக்கிறேன்.

தயவு செய்து இந்த வீடியோவை கூர்ந்து அவதானியுங்கள், நீங்கள் அந்தப் பாலத்தின் ஊடாக பயணம் செய்பவர்களாக இருந்தால் விபத்துக்கள் தொடர்பாக அவதானமாக இருங்கள். முடிந்தால் இதை நாலுபேருக்கு பகிர்வு செய்து விழிப்புணர்வு ஊட்டுங்கள்.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.



0 comments:

Post a Comment

Blogger Themes