கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு எனஎல்லாவிதத் தண்ணீர் நிலைகளும்மாசுபடுத்தப்பட்டே வருகின்றன. தண்ணீர்மனிதனைப் படைத்த வல்ல இறைவனின்அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன்கூறுகிறான்:
"உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்துஉங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),
(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும்வைக்கிறோம்."(அல்ஃபுர்கான், 25:48)
இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனிதசமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனதுஅருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபானவகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. தண்ணிபார்ட்டி, தண்ணி போட்டிருக்கான் என்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாகபயன்படுத்தும் அவல நிலையை நாம் காணத்தான் செய்கிறோம்.
"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம்செய்பவர்களை அல்லாஹ் (இறைவன்) நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)
0 comments:
Post a Comment